பட்டா மாற்றத்துக்கு விவசாயியிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
ரூ.50 ஆயிரம் லஞ்சம்
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே ஆர்.பாலக்குறிச்சியை சேர்ந்தவர் சிவக்குமார். விவசாயி. இவரது உறவினர்களான நித்யா, கவிதா ஆகிய 2 பேருக்கும் 9 சென்ட் மற்றும் 7 சென்ட் தரிசு நிலம் உள்ளது. இந்த நிலத்திற்குரிய பட்டா மாறுதல் செய்வதற்காக ஆர்.பாலக்குறிச்சியில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வரும், புதுக்கோட்டை மாவட்டம் கிளிக்குடி கிராமத்தை சேர்ந்த அப்பாதுரையை (வயது 56) சிவக்குமார் அணுகினார்.
அப்போது பட்டா மாறுதல் செய்ய ரூ.50 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என சிவக்குமாரிடம் கிராம நிர்வாக அலுவலர் அப்பாதுரை கேட்டுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர், இதுகுறித்து புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை பிரிவு போலீசில் புகார் கொடுத்தார்.
கைது
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சிவக்குமாரிடம் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகள் கொண்ட ரூ.50 ஆயிரத்தை கிராம நிா்வாக அலுவலரிடம் கொடுக்க அறிவுறுத்தினர். அதன்படி சிவக்குமார் நேற்று பொன்னமராவதி தாசில்தார் அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்திற்கு சென்றார். அங்கிருந்த கிராம நிர்வாக அலுவலர் அப்பாதுரையிடம் ரூ.50 ஆயிரத்தை அவர் கொடுத்தார்.
அப்போது அங்கு மறைந்திருந்த புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் பீட்டர் மற்றும் போலீசார் விரைந்து சென்று, அப்பாதுரையை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.50 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
பட்டா மாறுதலுக்கு ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.