புதுக்கோட்டை-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையோரம் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்




புதுக்கோட்டை-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையோரம் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

பசுமைமயமாக்கல்

தமிழகத்தில் தட்பவெட்ப நிலை மாற்றம், எதிர்கால நலன் கருதியும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தை பசுமைமயமாக்கல் திட்டத்தில் லட்சக்கணக்கான மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் பெருமளவு மரக்கன்றுகள் நல்ல முறையில் தயாராகி விட்டன. அதனை ஆங்காங்கே வனச்சரக அலுவலக வளாகத்தில் நர்சரி பண்ணை அமைத்து பராமரித்து வருகின்றனர்.

மண் தோண்டும் பணி

இந்த நிலையில் புதுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையோரம் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நட அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக சாலையோரம் மண் தோண்டும் பணி தற்போது தொடங்கியுள்ளது. பொக்லைன் மூலம் குறிப்பிட்ட இடைவெளியில் மண் தோண்டப்பட்டு வருகிறது.

சாலையின் இருபுறங்களும் இந்த மரக்கன்றுகள் நடப்பட உள்ளது. அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகே இருந்து ஆதனக்கோட்டை வரை தற்போது பணிகள் மும்முரமாக நடைபெறுகிறது. விரைவில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் நாவல், புங்கை, வேம்பு உள்ளிட்ட மரக்கன்றுகள், நிழல் தரக்கூடிய பசுமை மரங்களின் கன்றுகளும் நடப்படுகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments