புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணத்தில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் பெரிய குளமாக நெடுங்குளம் உள்ளது. இந்நிலையில் நெடுங்குளத்திற்கு மழைக்காலங்களில் வாய்க்கால் வழியாக தண்ணீர் வந்துகொண்டிருந்தது. ஆனால் தற்பொழுது வாய்க்கால் அனைத்தும் அடைப்பட்டுவிட்டதால் குளத்தில் தண்ணீர் குறைந்த அளவே இருந்து வருகிறது. இதையடுத்து நெடுங்குளத்திற்கு தொடர்ந்து தண்ணீர் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் சுமார் 1080 அடியில் சுமார் ரூ.15 லட்சம் மதிப்பில் சூரிய மின்சக்தியில் இயங்கும் வகையில் புதிதாக ஆழ்துளை கிணறு (போர்) அமைக்க புதிய நிர்வாகம் தீர்மானம் நிறைவேற்றியது.
அதனடிப்படையில் நேற்று 19.07.2024 வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு ஜமாத்தார்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் ஆழ்துளை கிணறு (போர்) அமைக்கும் பணி தொடங்கியது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.