மீமிசல் அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம்! வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு!!




மீமிசல் அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் அருகே சிறுகடவாக்கோட்டை கிராமத்தில் சிங்கமுக காளி, கருப்பர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு கிழக்கு கடற்கரை சாலையில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. 

இதில் புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் இருந்து மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. தொடர்ந்து பெரிய மாடு, சிறிய மாடு என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பந்தயம் நடைபெற்றது. 

இதில் பெரிய மாட்டு பிரிவில் 12 ஜோடிகள் மாட்டு வண்டிகளும், சிறிய மாடு பிரிவில் 30 ஜோடி மாட்டு வண்டிகளும் கலந்து கொண்டு எல்கையை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றன. பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு ரொக்கம், குத்துவிளக்கும் பரிசாக வழங்கப்பட்டது. 

இந்த பந்தயத்தை சாலையில் இரு பக்கமும் பொதுமக்கள் நின்று கண்டு களித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments