புதுக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் தடுப்பு சுவரில் மோதி நண்பர்கள் 2 பேர் பலி




புதுக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் தடுப்பு சுவரில் மோதியதில் நண்பர்கள் 2 பேர் பலியானார்கள்..

நண்பர்கள்

புதுக்கோட்டை மாவட்டம், மாப்பிள்ளையார்குளம் பழனியப்பா நகரை சேர்ந்தவர் இசாலா பாஷா. இவரது மகன் நபிகன் (வயது 22). இதேபோல் புதுக்கோட்டை மச்சுவாடி சுப்பிரமணிய நகர் பகுதியை சேர்ந்த சாகுல் ஹமீது மகன் முகமது ஹனிபா (27). இவரும் நபிகனும் நண்பர்கள் ஆவர்.

நேற்று முன்தினம் இரவு இவர்கள் இருவரும் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை நபிகன் ஓட்டினார். திருமயம் அருகே லேணா விலக்கு பகுதியில் வந்த போது தேசிய நெடுஞ்சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த தடுப்பு சுவரில் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவரும் கீழே விழுந்திதில் படுகாயமடைந்தனர்.

2 பேர் பலி

இதில் நபிகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த முகமது ஹனிபாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முகமது ஹனிபா சிகிச்சை பலனின்றி பரிதாப ரணமாக உயிரிழந்தார்

இது குறித்து நமணசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் நண்பர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments