புதுக்கோட்டை மாவட்டத்தில் "மக்களுடன் முதல்வர்" திட்டத்தின் கீழ் முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அரிமளம் ஊராட்சி ஒன்றியம், நெடுங்குடி கைலாசபுரம் சமுதாய கூடத்தில், கே.செட்டிப்பட்டி, கடியாப்பட்டி, ஆயிங்குடி, கண்ணன்காரக்குடி, மேலநிலைவயல், நெடுங்குடி, நல்லம்பால் சமுத்திரம், கே.ராயபுரம், கல்லூர் ஆகிய ஊராட்சிகளுக்கும், மணமேல்குடி ஊராட்சி ஒன்றியம், கட்டுமாவடி பி.எம்.எஸ். திருமண மண்டபத்தில், பிராமணவயல், இடையாத்திமங்கலம், இடையாத்தூர், காரக்கோட்டை, கட்டுமாவடி, நிலையூர், தண்டலை, கிருஷ்ணாஜிபட்டினம், திணையக்குடி ஆகிய ஊராட்சிகளுக்கும் நடைபெற உள்ளது. இதேபோல அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், கிளிக்குடி சமுதாய கூடத்தில், பரம்பூர், கதவம்பட்டி, தளிஞ்சி, குடுமியான்மலை, கிளிக்குடி, புல்வயல் ஆகிய ஊராட்சிகளுக்கும் நடைபெற உள்ளது. மேற்கண்ட முகாம்களில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம் என கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.