பாம்பன் புதிய பாலத்தின் நுழைவு பகுதியில் இருந்து ரெயில் நிலையம் வரை புதிய தண்டவாளங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
பாம்பன் ரெயில் பாலம்
பாம்பன் கடலில் ரூ.545 கோடியில் புதிய ரெயில் பாலம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பழைய ரெயில் பாலத்தின் நுழைவுப்பகுதியில் இருந்து பாம்பன் ரெயில் நிலையம் வரையிலான சுமார் 105 ஆண்டுகள் பழமை வாய்ந்த தண்டவாளங்கள் அகற்றப்பட்டு புதிய தண்டவாள பாதைகள் அமைக்கும் பணி 3 மாதத்திற்கு மேலாக தீவிரமாக நடந்து வருகிறது. அதற்காக பாம்பன் புதிய ரெயில்வே பாலத்தின் நுழைவு பகுதியில் இருந்து சின்னப்பாலம் ரெயில்வே கேட் வரை சுமார் 650 மீட்டர் தூரத்தில் இருந்த பழைய ரெயில்வே தண்டவாளங்கள் அகற்றப்பட்டன. மேலும் அப்பகுதியில் செம்மண் கொட்டப்பட்டு தண்டவாளப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது.
புதிய தண்டவாளம்
இந்த பணிக்காக லாரிகள் மூலம் ஜல்லிக்கற்கள் கொண்டு வரப்பட்டு புதிய பாலத்தின் நுழைவு பகுதியில் இருந்து பாம்பன் ரெயில்வே நிலையம் வரை தண்டவாளத்தில் ஓடியபடி ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு தண்டவாளங்களை சமதளப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. புதிய பாலத்தின் நுழைவுப்பகுதியில் இருந்து ரெயில் நிலையம் வரை நடைபெறும் தண்டவாளங்கள் அமைக்கும் பணி இன்னும் ஒருசில வாரங்களில் முழுமையாக நிறைவடையும் என ரெயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
புதிய ரெயில் பாதைக்காக நடைபெற்று வரும் தண்டவாள பணிகளை பொதுமக்கள் மிகுந்த ஆச்சரியத்துடன் நின்று வேடிக்கை பார்த்து செல்கின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.