புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் மேலப்பட்டு ஊராட்சி மன்றத்திற்குட்பட்ட அய்யனார் கோவில் குளம் தூர் வாரும் திட்டம் அறந்தாங்கி தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி கிளப் சார்பாக துவங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க தலைவர் அப்துல் பாரி தலைமை தாங்கினார் மண்டல ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார், துணை ஆளுநர் மருத்துவர் விஜய் முன்னிலை வகித்தனர்.
ரோட்டரி மாவட்ட திட்ட செயலாளர் சசிகுமார் ஃபோம்ரா மற்றும் நீர்நிலைகள் பாதுகாப்பு திட்ட இயக்குனர் ரவிச்சந்திரன் ஆகியோர் குளம் தூர் வாரும் திட்டத்தை துவக்கி வைத்தனர்.
முன்னதாக மேலப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் அயூப்கான் அனைவரையும் வரவேற்றார். இறுதியில் ரோட்டரி சங்க செயலாளர் ஆட்டோ பிரவீன் அனைவருக்கும் நன்றி கூறினார்.
சங்க திட்டம் இயக்குனர் ஜீவா சீனிவாசன், பொருளாளர் முனைவர் முபாரக் அலி, முன்னாள் தலைவர்கள் சையது பாவா பகுருதீன், விகாஸ் டாக்டர் சரவணன், கான் கஃபார் கான், முனைவர் முஜிபுர் ரகுமான், முன்னாள் செயலாளர்கள் கணேசன், இப்ராம்ஷா, மருத்துவர் தமிழ்ச்செல்வன். முன்னாள் பொருளாளர்கள் டீலக்ஸ் கண்ணன், பாப்பாத்தி முருகேசன், மாருதி பழனிவேல், ஏஎம் ராஜா, சீனிவாசன், சுரேஷ் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற துணை தலைவர் நீதிராஜ், கிராம தலைவர் காமராஜ், பாலையா (அம்பலம் )கனகராஜ், முத்துராமன் , மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
3.5 ஏக்கர் பரப்பளவு உள்ள குளம் தூர்வாரப்பட்டு விவசாயத்திற்கும், கோவில் நிகழ்வுகளுக்கும், மக்கள் பயன்பாட்டிற்கும் அர்ப்பணிக்கப்பட உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.