அதிராம்பட்டினத்தில் குளிர்பான கடை உரிமையாளரிடம் ரூ.20 ஆயிரம் வழிப்பறி வாலிபர் கைது; 3 பேருக்கு வலைவீச்சு




அதிராம்பட்டினத்தில் குளிர்பான கடை உரிமையாளரிடம் ரூ.20 ஆயிரம் வழிப்பறி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

குளிர்பான கடை

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள மகிழங்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது30). இவர் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் குளிர்பான கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் மணமேல்குடியிலிருந்து ஊருக்கு ேமாட்டார் சைக்கிளில் திரும்பி கொண்டிருந்தார்.

அதிராம்பட்டினம் அருகே ராஜாமடத்திலிருந்து மகிழங்கோட்டைக்கு வரும் வழியில் திடீரென நான்கு மர்ம நபர்கள் ஒன்றுசேர்ந்து அசோக்குமாரை வழிமறித்து மிரட்டி அவரிடம் இருந்த ரூ.16 ஆயிரத்தை பறித்தனர்.

3 பேருக்கு வலைவீச்சு

அவரிடம் இருந்து செல்போனை பறித்து அதில் இருந்த பண பரிவர்த்தனை ஆப் மூலமாக ரூ.4 ஆயிரத்தையும் பறித்தனர்.

இதுதொடர்பாக அசோக்குமார் அதிராம்பட்டினம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

புகாரின் பேரில் போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு விசாரித்தனர். இதில் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள அழகியநாயகிபுரத்தை சேர்ந்த பாலா (22) மற்றும் அதே பகுதியை சேர்ந்த 3 பேர் அசோக்குமாரிடம் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலாவை கைது செய்தனர். மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments