அதிராம்பட்டினத்தில் குளிர்பான கடை உரிமையாளரிடம் ரூ.20 ஆயிரம் வழிப்பறி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
குளிர்பான கடை
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள மகிழங்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது30). இவர் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் குளிர்பான கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் மணமேல்குடியிலிருந்து ஊருக்கு ேமாட்டார் சைக்கிளில் திரும்பி கொண்டிருந்தார்.
அதிராம்பட்டினம் அருகே ராஜாமடத்திலிருந்து மகிழங்கோட்டைக்கு வரும் வழியில் திடீரென நான்கு மர்ம நபர்கள் ஒன்றுசேர்ந்து அசோக்குமாரை வழிமறித்து மிரட்டி அவரிடம் இருந்த ரூ.16 ஆயிரத்தை பறித்தனர்.
3 பேருக்கு வலைவீச்சு
அவரிடம் இருந்து செல்போனை பறித்து அதில் இருந்த பண பரிவர்த்தனை ஆப் மூலமாக ரூ.4 ஆயிரத்தையும் பறித்தனர்.
இதுதொடர்பாக அசோக்குமார் அதிராம்பட்டினம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
புகாரின் பேரில் போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு விசாரித்தனர். இதில் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள அழகியநாயகிபுரத்தை சேர்ந்த பாலா (22) மற்றும் அதே பகுதியை சேர்ந்த 3 பேர் அசோக்குமாரிடம் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலாவை கைது செய்தனர். மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.