செங்கீரையில் உள்ள சில பகுதிகளை ராயவரத்துடன் இணைத்ததை கண்டித்து கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 200 பேர் கைது செய்யப்பட்டனர்.
பல்வேறு போராட்டங்கள்
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம் செங்கீரை ஊராட்சியில் 1,300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 1995-ம் ஆண்டு செங்கீரை ஊராட்சியில் இருந்து சில பகுதிகளை பிரித்து ஆயிங்குடி, ராயவரம் ஆகிய ஊராட்சிகளோடு இணைத்து அன்றைய மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார். ஆனால் அந்த உத்தரவு உடனடியாக செயல்பாட்டுக்கு வரவில்லை. சுமார் 28 ஆண்டுகளாக தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் செங்கீரை ஊராட்சியில் வரி இனங்கள் உள்ளிட்ட பல்வேறு இனங்களை செலுத்தி வந்தனர்.
இந்நிலையில் 28 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 19.12.23 அன்று முன்பு பிரித்த ஊராட்சி எல்கையை செயல்படுத்த அப்போதைய மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
200 பேர் கைது
இதனையடுத்து நேற்று செங்கீரை ஊராட்சியில் உள்ள சில பகுதிகளை ராயவரம் ஊராட்சியுடன் இணைத்ததை கண்டித்து செங்கீரை கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் சென்றனர். இதனால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
முற்றுகை இடச்சென்ற பொதுமக்களை போலீசார் வழிமறித்து கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரும் அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.