கோபாலப்பட்டிணம் மீமிசல் பகுதியில் நீண்ட நாட்களுக்கு பிறகு மழை




கோபாலப்பட்டிணம் மீமிசல் பகுதியில் நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பெய்தது

தமிழ்நாட்டில் கடந்த சில காலமாகவே நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பிட்ட சில மாவட்டங்கள் என்று இல்லாமல் மாநிலம் முழுக்க பெரும்பாலான இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது
அதிலும் குறிப்பாக கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் நல்ல மழையால் மாநிலத்தில் உள்ள நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. 

தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (30 - 40 கி.மீ வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. 

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டிணம் மீமிசல் பகுதியில் 
கடந்த இரண்டு நாட்களாக 
 கருமேகங்கள் சூழ்ந்து வெப்பம் தணிந்து  மழை நீண்ட நாட்களுக்கு பிறகு  மழை பெய்தது குளிர்ச்சியான சூழல்நிலவியது.

மழையால் ஒரு சில இடங்களில் தாழ்வான பகுதியில்   தண்ணீர் தேங்கியுள்ளது

தற்போது பெய்த  மழையினால்  பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்
 கோபாலப்பட்டிணத்தில் காட்டுத்குளம் நெடுங்குளம் மக்கள் குளிப்பதற்கு பயன்படுத்தி வருகிறார்கள் நெடுங்குளத்தில்  குறைவான அளவில் தண்ணீர் உள்ளது..காட்டுக்குளத்லில் குளிப்பதற்கு ஓரளவு தண்ணீர் உள்ளது ஆனால்  நெடுங்குளம்  எப்போது நிரம்பும் மக்கள் காத்து கொண்டு உள்ளார்கள்

Pc Credit: மகிழ்ச்சி யாசீன்


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments