திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவை தவிர குறிப்பிட்ட நாட்களில் அபுதாபிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் சார்பில் விமானம் இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இண்டிகோ நிறுவனத்தின் சார்பில் புதிய விமான சேவை, நேரடியாக திருச்சியில் இருந்து அபுதாபிக்கு இயக்கப்படுவதாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. இதற்கான பணிகளை விமான நிறுவனத்தினர் மேற்கொண்டு வந்தனர். இதைத்தொடர்ந்து நேற்று அந்த விமானம் இயக்கப்பட்டது. இதில் அபுதாபியில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு முதல் விமானம் காலை 6.53 மணிக்கு வந்தது. இந்த விமானத்திற்கு திருச்சி விமான நிலையத்தின் சார்பில் ‘வாட்டர் சல்யூட்’ முறையில் தண்ணீரை பீய்ச்சி அடித்து சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த விமானத்தில் 169 பயணிகள் வந்தனர். மீண்டும் இந்த விமானம் காலை 7.30 மணியளவில் 181 பயணிகளுடன் அபுதாபி நோக்கி புறப்பட்டு சென்றது. இந்த விமான சேவையானது வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படுவதாக விமான நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளுக்கு செல்லும் பயணிகள் அதிக அளவில் இந்த விமானத்தின் மூலம் பயன்பெற வாய்ப்புள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.