ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மீமிசலில் பொதுமக்கள் சாலை மறியல்




மீமிசலில் ஒரு குளத்தை சரி செய்து கோவிலுக்கு சொந்தமான பொருட்களை வைப்பதற்காக சத்திரப்பட்டினம் கிராமத்தினர் முடிவு செய்து பணியை மேற்கொண்டுள்ளனர். இதற்காக குளக்கரையில் பணியை தொடங்கினர். இந்த நிலையில் அப்பகுதிக்கு பொருட்களை கொண்டு செல்ல முடியாத அளவுக்கு வேலி அமைத்து தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். அந்த வேலியை அப்புறப்படுத்தி விட்டு அதன் வழியாக குளக்கரைக்கு செல்வதற்கு வழி கேட்டு கிராமத்தினர் போராடி வந்தனர்.

இந்த நிலையில் ஆக்கிரமிப்பபை அகற்றக்கோரி மீமிசலில் கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த வருவாய் துறை அதிகாரிகளும், போலீசாரும் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்தனர். அதன்பின் பொதுமக்கள் மறியலை கைவிட்டனர்.








எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments