‘சிவகங்கை’ கப்பல்
நாகையில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14-ந்தேதி முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. ‘செரியாபாணி’ என்ற பெயர் கொண்ட பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது. இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்துக்கு இருநாட்டு பயணிகள் இடையே நல்ல வரவேற்பு இருந்தது.
வடகிழக்கு பருவ மழையை காரணம் காட்டி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதியுடன் பயணிகள் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து கப்பல் போக்குவரத்து ஒத்தி வைக்கப்பட்டது. இது பயணிகள் இடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நாகையில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு மீண்டும் ‘சிவகங்கை’ என்ற பெயரில் புதிய கப்பல் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு அதற்கான இருநாடுகளுக்கு இடையே சோதனை ஓட்டமும் நடந்து முடிந்தது.
150 இருக்கைகள்
இந்த கப்பல் 123 சாதா இருக்கைகளும், 27 பிரீமியம் இருக்கைகளும் என 150 இருக்கைகள் கொண்டது. இந்த கப்பலில் பயணிக்க கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்பதிவு தொடங்கப்பட்டது. இதில் சாதா இருக்கைகளுக்கு ரூ.5 ஆயிரமும், பிரீமியம் இருக்கைகளுக்கு ரூ.7,500-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. www.sailindsri.com என்ற இணையதள முகவரியில் இருநாட்டு பயணிகளும் ஆர்வமுடன் முன்பதிவு செய்தனர். இதையடுத்து நேற்று முதல் நாகையில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு ‘சிவகங்கை’ கப்பல் தனது முதல் பயணிகள் சேவையை தொடங்கியது.
கலெக்டர் தொடங்கி வைத்தார்
இதன் தொடக்க விழா நாகை துறைமுக வளாகத்தில் நேற்று நடந்தது. விழாவில் கலெக்டர் ஆகாஷ், செல்வராஜ் எம்.பி., புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், நாகை நகராட்சி தலைவர் மாரிமுத்து, கப்பலை இயக்கும் இந்துஸ்ரீ நிறுவனத்தின் தலைவர் சுந்தர்ராஜ் ஆகியோர் கொடியசைத்து கப்பல் சேவையை தொடங்கி வைத்தனர்.
அதைத்தொடர்ந்து நாகையில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு நண்பகல் 12.20 மணியளவில் பயணிகள் கப்பல் புறப்பட்டது.
44 பேர் பதிவு செய்திருந்தனர்
இந்த கப்பலில் பயணம் செய்ய 44 பேர் முன்பதிவு செய்திருந்தனர். இதையடுத்து அவர்கள் காலை 8 மணி முதல் குடியுரிமை சோதனை உள்ளிட்ட பல்வேறு சோதனைகளுக்கு பிறகு கப்பலில் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மிகுந்த ஆர்வத்துடன் இந்த கப்பலில் பயணிக்க சுற்றுலா பயணிகள், தொழில் அதிபர்கள் வருகை தந்தனர். அதேபோல் இலங்கையை சேர்ந்த 5 பேரும் தங்களது நாட்டிற்கு திரும்பி சென்றனர்.
இருநாடுகளுக்கு இடையே மகிழ்ச்சி
இந்த ‘சிவகங்கை’ கப்பலை காரைக்கால் மாவட்டம் திருமலைராயன்பட்டினம் பகுதியை சேர்ந்த கேப்டன் பாஸ்கர் என்பவர் இயக்க அவருடன் கப்பலில் 15 ஊழியர்கள் பயணித்தனர். முழுவதுமாக குளிர்சாதன வசதி கொண்ட இந்த கப்பலில் கட்டணத்துடன் உணவு, டி.வி. உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டிருந்தது.
நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும் பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்பட்டிருப்பது இரு நாடுகளுக்கு இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாகையில் இருந்து 4 மணிநேரத்தில் இலங்கை பயணம்
சிவகங்கை கப்பலை இயக்கும் கேப்டன் பாஸ்கர் கூறும்போது, நாகையில் இருந்து இலங்கை 65 கடல் மைல் தொலைவில் உள்ளது. அதாவது 90 கிலோ மீட்டர் ஆகும். பயணிகள் கப்பலை 25 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கி சென்றால் 4 மணி நேரத்தில் இலங்கை சென்று விடலாம். பயணிகளின் இருக்கைக்கு கீழ் லைப் ஜாக்கெட் உள்ளது. அதேபோல அவசர காலங்களில் மீட்பு படகு ஒன்றும் கப்பலில் தயார் நிலையில் உள்ளது. கப்பலில் பயணிகள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.