போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் பேரளம், சிங்களாஞ்சேரியில் ரூ.90 கோடியில் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருவதால் டெல்டா மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ரெயில்வே கேட்
சாலைகள் பல்வேறு பகுதிகளை இணைப்பதுடன் நாட்டின் வளர்ச்சிக்கான தேவையாகவும் இருந்து வருகிறது. சாலை போக்குவரத்து பல்வேறு தொழில்களின் வளர்ச்சிக்கு உற்ற துணையாக இருந்து வருவதை யாராலும் மறுக்க முடியாது.
நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்கள் பல இடங்களில் ரெயில்வே தண்டவாளத்தை கடந்து செல்ல வேண்டியுள்ளது. மேம்பாலம், கீழ்பாலம் இல்லாத இடங்களில் வாகனங்கள் ரெயில்வே கேட்டின் முன்பாக பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
நீண்ட நேரம் காத்திருப்பு
காத்திருப்பால் பயண நேரம் அதிகரித்து, உரிய நேரத்தில் குறிப்பிட்ட இடத்துக்கு செல்லமுடியாத சூழல் உருவாகிறது. குறிப்பாக ஆபத்து காலங்களில் ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாமல் உயிரிழப்புகள் ஏற்படுகிறது.
ரெயில்வே கேட்டில் காத்திருந்த நேரத்தை ஈடுகட்ட வாகன ஓட்டிகள் அதிவேகமாக செல்ல முயற்சிக்கும்போது விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே நெடுஞ்சாலையின் குறுக்காக உள்ள ரெயில்வே பாதையில் மேம்பாலமோ அல்லது கீழ்பாலமோ மிகவும் அத்தியாவசிய தேவையாக இன்று மாறி விட்டது.
புறவழிச்சாலை
தஞ்சை-திருவாரூர்-நாகை தேசிய நெடுஞ்சாலையில் குறிப்பாக திருவாரூர் மாவட்ட பகுதியில் கோவில்வெண்ணி, நீடாமங்கலம் முகப்பில் மன்னார்குடி செல்லும் ரெயில்பாதை, நீடாமங்கலம் ரெயில் நிலையம் மற்றும் கொரடாச்சேரி என 4 ரெயில்வே கேட்டுகள் உள்ளன.
தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலை இரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு, கோவில்வெண்ணிக்கு முன்னதாக புறவழிச்சாலை தொடங்கி கொரடாச்சேரி ஊர்குடி பகுதியில் பழைய வழிப்பாதையுடன் இணைகிறது. இந்த சாலை எந்த ரெயில்வே கேட்டுகளிலும் வாகனங்கள் சிக்காமல் தொடர்ந்து பயணிப்பதற்கு வசதியாக அமைந்துள்ளது,
அதிகமான சரக்கு ரெயில்கள்
திருவாரூர்-மயிலாடுதுறை சாலையில் பேரளத்தில் ஒரு ரெயில்வே கேட் அமைந்துள்ளது. இந்த ரெயில்வே கேட் மூடப்பட்டால், மாற்று வழியின்றி வாகனங்கள் அணிவகுத்து நிற்பது வழக்கம். குறிப்பாக இந்த பாதை வழியாக அதிகமான அளவில் சரக்கு ரெயில்கள் செல்வதுடன், சென்னை போன்ற பகுதிகளுக்கு பயணிகள் ரெயில்கள் அதிகமாக சென்று வருகின்றன.
இதனால் ரெயில்வே கேட் என்பது அடிக்கடி மூடப்படுவதால் திருவாரூர், நாகை மாவட்ட பகுதிகளுக்கு செல்லும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
ரெயில்வே மேம்பாலம்
இதேபோல் திருவாரூர்-மன்னார்குடி பாதையில் சிங்களாஞ்சேரியில் உள்ள ரெயில்வே கேட், திருவாரூர்-தஞ்சை ரெயில் பாதையில் அமைந்துள்ளது. இந்த பாதையில் அதிக ரெயில் போக்குவரத்து காரணமாக தொடர்ச்சியாக ரெயில்வே கேட் மூடப்படும்.
இந்த பாதை என்பது திருவாரூர் மாவட்டம் மட்டுமின்றி தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை போன்ற பகுதிக்கு செல்லும் மக்களுக்கும் முக்கிய வழித்தடமாக இருந்து வரும் நிலையில் ரெயில்வே கேட் மூடப்படுவதால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மாற்று வழி இல்லாததால் அனைத்து வாகனங்களும் நீண்ட வரிசையில் காத்திருப்பது வழக்கம். இதனால் ரெயில்வே மேம்பாலம் கட்ட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டெல்டா மாவட்ட மக்கள்
பேரளம், சிங்களாஞ்சேரி ரெயில்வே கேட்டுகள் என்பது பிரதான சாலையில் அமைந்துள்ளது. மயிலாடுதுறை-திருவாரூர்-நாகை-தஞ்சை ஆகிய 4 டெல்டா மாவட்ட மக்களும் இந்த ரெயில்வே கேட்டுகளில் சிக்கி அவதிப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் சேவை வாகனங்கள் மாற்று வழியின்றி ரெயில்வே கேட்டில் சிக்கி தவிப்பது வழக்கமாக நடக்கிறது. இந்த இரு இடங்களிலும் ரெயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என டெல்டா மாவட்ட மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
ரூ.90 கோடியில் பணிகள் தீவிரம்
மக்கள் கோரிக்கையை ஏற்று பேரளம் மற்றும் சிங்களாஞ்சேரி ஆகிய இரு இடங்களில் ரெயில்வே மேம்பாலம் கட்ட அரசு திட்டமிட்டது. அதன்படி பேரளம் ரெயில்வே மேம்பாலம் ரூ.47 கோடியே 50 லட்சம் மதிப்பில் கட்டுவற்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதேபோல் சிங்களாஞ்சேரி மேம்பாலம் ரூ.42 கோடியே 50 லட்சம் மதிப்பில் கட்டுவதற்கு டெண்டர் விடப்பட்டு, கடந்த ஆண்டு பூமி பூஜையுடன் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. பேரளம், சிங்களாஞ்சேரி ஆகிய இடங்களில் ரெயில்வே மேம்பால கட்டுமான பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதால் டெல்டா மாவட்ட மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.