ராமநாதபுரம்-கீழக்கரை ரெயில்வே மேம்பாலம் பணி முடிந்தும் இன்னும் திறக்கப்படவில்லை. அந்த பாலத்தை விரைந்து திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து உள்ளது.
கீழக்கரை ரெயில்வே மேம்பாலம்
ராமநாதபுரம்-கீழக்கரை சாலையில் ரெயில்வே கேட் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெருக்கடியை தடுக்க நெடுஞ்சாலைத் துறையின் மூலம் ரூ.30.74 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டப்பட்டது. மொத்தம் 719.60 மீட்டர் நீளத்திலும், 12 மீட்டர் அகலத்திலும் அமைக்கப்பட்டுள்ள இந்த மேம்பாலத்திற்கான அணுகு சாலை இருபுறமும் சேர்த்து மொத்தம் 379 மீட்டர் நீளம், 5.50 மீட்டர் அகலம் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு அடிக்கல் நாட்டி தொடங்கப்பட்ட இந்த பால பணிகள் நீண்ட தாமதத்திற்கு பின்னர் தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் முக்கிய பகுதியான ரெயில்வே தண்டவாள பகுதியில் இருபுறமும் ரெயில்வே நிர்வாகத்தின் சார்பில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பாலத்திற்கான கட்டமைப்பு பணிகள் முடிவடைந்து தெருவிளக்கு வசதி, மின்சார வசதி, தண்ணீர் வெளியேறும் வசதி, பெயிண்ட் அடிக்கும் பணி என அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டன.
தேர்தல் நடத்தை விதி
திறப்புவிழா நடைபெற இருந்த நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டு நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதனால் திறப்பு விழா தள்ளிப்போனது. தற்போது தேர்தல் முடிவுகள் வெளியாகி 3 மாதங்கள் ஆன நிலையில் மேம்பாலம் திறக்கப்படாமல் உள்ளது. 6 ஆண்டுகளாக போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் மக்களுக்கு அதிலிருந்து விடிவு ஏற்படும் வகையில் விரைவில் பாலத்தை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பாலம் தொடங்கும் இடத்தில் தற்போதைய பஸ்நிலையம் அமைக்கப்பட்டுள்ளதால் பஸ்கள் வந்து செல்வதிலும் வாகனங்கள் அந்த பகுதியை கடந்து செல்வதிலும் கடும் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. பாலத்தின் முன்பகுதி தற்போது வாகனம் நிறுத்தும் இடமாக மாறி அதனாலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதுபோன்ற காரணங்களினால் மேற்கண்ட பாலத்தினை உடனடியாக திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று தொடர் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் பாலம் திறக்காததை கண்டித்து சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட சிலர் இந்த வாரம் மேற்கண்ட பாலத்தை தாங்களே திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர உள்ளதாக கருத்துகள் பதிவிட்டு வரும் தகவல் சமூகவலைத்தளங்களில் பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டீசல் செலவு அதிகரிப்பு
வக்கீல் மாதவன்:-
ராமநாதபுரம் ெரயில் நிலையம் அருகே கீழக்கரை செல்லும் சாலையில் அமைந்துள்ள ெரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் ராமநாதபுரம் ராமேசுவரம் நெடுஞ்சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக இந்த ெரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க கடந்த 2018-ல் பணிகள் தொடங்கப்பட்டது. பல்வேறு காரணங்களால் தாமதமாகி வந்த பாலம் கட்டும் பணி ஒரு வழியாக முடிந்து விட்டது. ஆனாலும் பாலம் திறக்கப்படாததால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
ராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரை செல்பவர்கள் இந்தப் பாலத்தின் வேலைகள் முடிவடையாததால் பல கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டி உள்ளது. இதனால் அரசு பஸ்களுக்கு டீசல் செலவு அதிகமாகின்றது. ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர சேவை வாகனங்களும் பல கிலோமீட்டர் சுற்றிச் செல்ல வேண்டி உள்ளது.
இதற்குப் பின் பணிகள் தொடங்கப்பட்ட ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி மற்றும் சட்டக் கல்லூரி போன்றவை கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்து விட்டன. ஆனால் நகரின் மத்தியில் உள்ள கட்டி முடிக்கப்பட்ட இந்தப் பாலம் ஏதோ காரணத்திற்காக இன்னும் திறக்கப்படாததால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து பாலத்தை திறக்க வேண்டும்.
சமூக விரோத செயல்கள்
கவுன்சிலர் ராஜாராம் பாண்டியன் கோபால்:-
ராமநாதபுரம் ெரயில் நிலையம் மற்றும் பஸ் நிலையம் அருகே இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக இந்த பாலம் கட்டும் பணி நடைபெற்று வந்ததால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. தற்போது பாலம் கட்டி முடிக்கப்பட்டும் திறக்கப்படாமல் உள்ளதால் இரவு நேரத்தில் சமூகவிரோதிகள் இந்த பாலத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பாலம் திறக்கப்படுவதற்கு முன்பே சாலைகளில் கற்கள் பெயர்ந்து சேதமடைந்து காணப்படுகிறது. இது குறித்து தமிழக அரசு உயர் மட்ட அளவில் விசாரணை நடத்தி தாமதத்திற்கான காரணத்தை கண்டறிய வேண்டும். பாலத்தை உடனே திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போராட்டம் நடத்தப்படும்
மாவட்ட பா.ஜனதா தலைவர் தரணி முருகேசன்:-
ராமநாதபுரம் கீழக்கரை சாலையில் கட்டி முடிக்கப்பட்ட ெரயில்வே மேம்பாலம் அதிகாரிகளின் அலட்சியத்தால் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை போராட்டம் அறிவித்ததை தொடர்ந்து மிக நீண்ட காலமாக பணிகள் நடைபெற்று வந்த அத்திக்கடவு அவினாசி குடிநீர் திட்டம் உடனடியாக செயல்பாட்டிற்கு வந்தது. அதேபோல இந்த பாலம் தொடர்பாக தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையின் கவனத்திற்கு எடுத்துச் சென்று பா.ஜனதா சார்பில் போராட்டம் நடத்தப்படும். அதற்கு முன்பாக அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து பாலத்தை திறக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
எது எப்படியோ ரெயில்வே ேமம்பாலத்துக்காக கடந்த 6 ஆண்டுகளாக போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகன ஓட்டிகள் தற்போது பாலம் பணி முடிந்தும் இன்னும் திறக்கப்படாததால் வேதனையில் உள்ளனர். தினமும் காலை, மாலைவேலைகளில் நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகன ஓட்டிகளின் மனம் குளிர பாலம் திறக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.