வரப்பிரசாதம்
தமிழக அரசு பொதுமக்கள் எளிதாக கட்டிட அனுமதி பெறுவதற்காக சுய சான்றிதழ் கட்டிட அனுமதி வழங்கும் திட்டத்தை கடந்த மாதம் முதல் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் 2,500 சதுரடி மனையில் 3 ஆயிரத்து 500 சதுரடி வரையிலான தரைத்தளம் அல்லது தரைத்தளம் மற்றும் முதல் தளம் கொண்ட 2 குடியிருப்பு கட்டிடங்களுக்கு சுய சான்றிதழ் முறையில் உடனடி கட்டிட அனுமதி வழங்கப்படும்.
பொதுமக்களே நேரிடையாக https://onlineppa.tn.gov.in/SWP-web/ login என்ற இணையதளத்தில் விண்ணப்பம் செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளதால் லஞ்ச-லாவண்யம் என்பது கிடையாது. கூடுதல் கட்டணம் யாருக்கும் செலுத்த தேவையில்லை. இந்த திட்டம் பொதுமக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இருப்பினும் இந்த திட்டத்தில் நேரிடையாக விண்ணப்பிக்கும்போது ஏதாவது தவறு நடந்துவிடும் என்ற அச்சத்தால் பொதுமக்கள் என்ஜினீயர்கள் அல்லது வேறுநபர்கள் மூலம் விண்ணப்பம் செய்கின்றனர். எனவே இந்த திட்டத்தில் சில மாற்றம் கொண்டு வர தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது.
இ-சேவை மையம்
இது குறித்து துறையின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- பொது மக்கள் கட்டிட அனுமதி எளிதாக பெறவேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த திட்டம் தான் சுய சான்றிதழ் முறையில் கட்டிட அனுமதி வழங்கும் திட்டம். கட்டிட அனுமதிக்காக விண்ணப்பம் செய்பவர்களில் சுமார் 72 சதவீதம் பேர் 3 ஆயிரத்து 500 சதுரடிக்குள் கட்டுபவர்கள்தான். எனவே தான் அந்த அளவினை தேர்வு செய்து சுய சான்றிதழ் முறையில் கட்டிட அனுமதி உடனே வழங்கப்படுகிறது. இதற்கான இணையதளத்தில் பொதுமக்கள் எளிதாக விண்ணப்பம் செய்து அனுமதி பெறலாம். ஆனால் பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததால் என்ஜினீயர்கள் அல்லது வேறுசிலர் மூலம் தான் விண்ணப்பம் செய்யும் நிலை உள்ளது. அவர்கள் அரசு கட்டணத்தை விட கூடுதலாக ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை கேட்பதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
அரசுக்கும், மக்களுக்கு இடையே இருப்பவர்களால் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. அதனால் தான் அரசுக்கும் கெட்டப்பெயர் ஏற்படுகிறது. எனவே இந்த விவகாரத்தில் மூன்றாம் நபர் தலையீட்டினை தடுக்க தமிழக அரசு, இ-சேவை மையங்கள் மூலம் கட்டிட அனுமதி சான்றிதழ் வழங்க திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகள் தற்போது நடந்து வருகிறது. பொதுமக்கள் அங்கு சென்று எளிதாக விண்ணப்பம் செய்து கட்டிட அனுமதி சான்றிதழ் பெறலாம். கூடுதல் கட்டணம் செலுத்த தேவையில்லை. விரைவில் இதற்கான அறிவிப்பு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.