கல்லணை கால்வாய்
மேட்டூர் அணையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக தண்ணீர் வந்துள்ளது. இதனால் அங்கிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த வாரம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஈச்சான்விடுதி அணைக்கட்டுக்கு கல்லணை கால்வாய் வழியாக காவிரி தண்ணீர் வந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பின்னர் அங்கிருந்து பல்வேறு பகுதிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதையறிந்த அப்பகுதி விவசாயிகள் ஆவணம் கிராமத்தில் ஆவலோடு ஒன்று கூடி காவிரி தண்ணீரை வரவேற்றனர். மேலும் புதுக்கோட்டை-தஞ்சை மாவட்ட எல்லையிலான நெடுவாசல் பகுதி வழியாக காவிரி தண்ணீர் ஆலங்குடி, மேற்பனைக்காடு பகுதிக்கு நேற்று முன்தினம் வந்தது.
வரவேற்பு
அதனையடுத்து நாகுடி கடைமடை பகுதிக்கு கல்லணை கால்வாய் மூலமாக காவிரி தண்ணீர் நேற்று காலை 9.30 மணி அளவில் வந்தடைந்தது. இதனை கல்லணை கால்வாய் பாசனத்தாரர் விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்கத்தலைவர் கொக்குமடை ரமேஷ் தலைமையில், விவசாயிகள் கடைமடை பகுதிக்கு வந்த தண்ணீரை வணங்கி மலர் தூவி வரவேற்றனர். மேலும் விவசாயிகள் இனிப்புகள் கொடுத்து கொண்டாடினர். விவசாய பணிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் குறித்த நேரத்தில் திறக்கப்பட்டுள்ளதால் தஞ்சை, புதுக்கோட்டை மாவட்ட எல்லை பகுதிக்கு கரை புரண்டு வந்த காவிரி தண்ணீரை பயன்படுத்தும் கடைமடை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.