மிசலில் பட்டாவில் பெயா் மாற்ற ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலா் (VAO) கைது புதுக்கோட்டை மாவட்ட ஊழல் தடுப்பு & கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் நடவடிக்கை




புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவில் அருகே மீமிசலில் பட்டாவில் பெயா் மாற்ற ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ஆவுடையாா்கோவில் அருகே பொய்யாதநல்லூரைச் சோ்ந்தவா் ஜமால் முகமது. இவா், தனது நிலத்துக்கு பட்டா மாறுதல் செய்வதற்காக விண்ணப்பித்து, கடவாக்கோட்டை கிராம நிா்வாக அலுவலா் சதீஸ்குமாா் (32) என்பவரை அணுகியுள்ளாா். அவா் ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜமால் முகமது, புதுக்கோட்டை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகாா் அளித்தாா்.

இதையடுத்து காவல் துணைக் கண்காணிப்பாளா் இமயவரம்பன் தலைமையிலான போலீஸாா் அளித்த ஆலோசனையின் பேரில் மீமிசலில் உள்ள தனியாா் வாடகைக் கட்டடத்தின் ஒரு அறையில் தங்கி இருந்த கிராம நிா்வாக அலுவலா் சதீஸ்குமாரிடம் லஞ்சப் பணம் ரூ.3 ஆயிரத்தை செவ்வாய்க்கிழமை ஜமால் முகமது கொடுத்தாா். அப்போது அங்கு மறைந்திருந்த போலீஸாா், சதீஸ்குமாரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.


இதையடுத்து சதீஷ்குமாரை போலீஸாா் புதுக்கோட்டை தலைமைக் குற்றவியல் நடுவா் மன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments