வௌிநாட்டில் வேலை
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்தவர் அமல்ராஜ்(வயது 33). இவருடைய மனைவி தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள கொள்ளுக்காடு அந்தோணியார்புரத்தை சேர்ந்த லெப்தியா(30) . இவர்களுக்கு 1¾ வயதில் ரிசிவான் என்ற ஆண் குழந்தை இருந்தது. அமல்ராஜ் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இதனால் லெப்தியா தனது குழந்தையுடன் கொள்ளுக்காடு அந்தோணியார்புரத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். லெப்தியாவின் தாய்வீடு கடற்கரை மீன்பிடித்துறைமுகம் ஓரத்தில் உள்ளது.
இதனால் இங்கு நண்டு, மீன்களை எடுத்து செல்ல அடிக்கடி சரக்கு வேன்கள் வந்த செல்வது வழக்கம். நேற்றுமுன்தினம் ஒரு சரக்கு வேன் மீன், நண்டுகளை எடுத்து செல்ல அந்தோணியார்புரம் கிராமத்துக்கு வந்தது.
பரிதாப சாவு
அப்போது தனது வீட்டின் அருகே குழந்தை ரிசிவான் விளையாடிக்கொண்டு இருந்தது. ஊருக்குள் வந்த வேனின் பின்புற சக்கரத்தில் குழந்தை ரிசிவான் எதிர்பாராதவிதமாக சிக்கி படுகாயம் அடைந்தான். உடனே குழந்தையை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை ரிசிவான் உயிரிழந்தான்.
இதுகுறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேன் சக்கரத்தில் சிக்கி குழந்தை உயிரிழந்த சம்பவம் சேதுபாவாசத்திரம் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.