புதுக்கோட்டையில் 4 வழிச்சாலை பணியை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு




புதுக்கோட்டை நெடுஞ்சாலை கோட்டத்திற்குட்பட்ட திருச்சி முதல் மீமிசல் வரையிலான நெடுஞ்சாலையில் முதல்-அமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2023-2024-ம் ஆண்டில் இரு வழிச்சாலையில் இருந்து 4 வழி சாலையாக அகலப்படுத்தி வலுப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதில் புதுக்கோட்டை அசோக்நகர் பகுதியில் இரு வழிச்சாலை பணி 4 வழிச்சாலையாக மாற்றும் பணி நடைபெறுகிறது. இந்த பணியை திருச்சி கண்காணிப்பு பொறியாளர் செந்தில், புதுக்கோட்டை கோட்ட பொறியாளர் தமிழழகன், ஆலங்குடி உதவி கோட்ட பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி பொறியாளர் தியாகராஜா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க அறிவுறுத்தினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments