தமிழகத்தில் சாராயம், கஞ்சா உள்பட போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் சாராயம் காய்ச்சுதல், கடத்தல், விற்பனை, போலி மதுபானம் தயாரித்தல், விற்பனை, கஞ்சா பயிரிடுதல் மற்றும் விற்பனை தொடர்பாக பொதுமக்கள் 85310 85350 என்ற செல்போன் எண்ணில் புகார் தெரிவிக்கலாம், வாட்ஸ்-அப்பிலும் தகவல் அனுப்பலாம் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர். மேலும் தகவல் தெரிவிப்பவரின் பெயர் ரகசியம் காக்கப்படும் எனவும், போதைப்பொருள் இல்லாத மாவட்டமாக உருவாக்கவும் என போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் பொதுமக்கள் தகவல் அளிக்க வசதியாக ஆங்காங்கே விழிப்புணர்வு பதாகைகளும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாரால் வைக்கப்பட்டு வருகிறது. இந்த பதாகை பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.