போதைப்பொருட்கள் விற்பனை தொடர்பாக செல்போனில் புகார் தெரிவிக்கலாம் போலீசார் விழிப்புணர்வு பதாகை வைப்பு




தமிழகத்தில் சாராயம், கஞ்சா உள்பட போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் சாராயம் காய்ச்சுதல், கடத்தல், விற்பனை, போலி மதுபானம் தயாரித்தல், விற்பனை, கஞ்சா பயிரிடுதல் மற்றும் விற்பனை தொடர்பாக பொதுமக்கள் 85310 85350 என்ற செல்போன் எண்ணில் புகார் தெரிவிக்கலாம், வாட்ஸ்-அப்பிலும் தகவல் அனுப்பலாம் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர். மேலும் தகவல் தெரிவிப்பவரின் பெயர் ரகசியம் காக்கப்படும் எனவும், போதைப்பொருள் இல்லாத மாவட்டமாக உருவாக்கவும் என போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் பொதுமக்கள் தகவல் அளிக்க வசதியாக ஆங்காங்கே விழிப்புணர்வு பதாகைகளும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாரால் வைக்கப்பட்டு வருகிறது. இந்த பதாகை பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments