அதிராம்பட்டினத்தில் ரெயில் வராமல் கேட் மூடப்பட்டதால் ரெயில்வே ஊழியர்களிடம் வாகன ஓட்டிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மூடப்பட்ட ரெயில்வே கேட்
அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரயில்வே கேட் வழியாக ராமேஸ்வரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, காரைக்கால், புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா வாகனங்கள், அரசு மற்றும் தனியார் பஸ்
கள், கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.
இதுமட்டுமல்லாமல் அதிராம்பட்டினத்தை சுற்றியுள்ள கிராங்களில் இருந்து பொதுமக்கள், மீனவர்கள் மற்றும் வியாபாரிகள் அவ்வழியாக இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை 9 மணி அளவில் ரயில்வே ஊழியர்கள் ரயில்வே கேட் ரோப்பில் பழுது ஏற்பட்டதால் ரயில்வே கேட்டை மூடியுள்ளனர். இதனால் ரயில் வரப்போகுது என்று நினைத்துக் கொண்டு நீண்ட நேரம் வாகன ஓட்டிகள் காத்திருந்தனர்.
வாகன ஓட்டிகள் வாக்குவாதம்
ரயில்வே கேட் ரோப் கயிறை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டதை பார்த்து வாகன ஓட்டிகள் ஆத்திரம் அடைந்தது ரயில்வே ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் ரயில்வே கேட் திறக்கப்பட்டது.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில் அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரயில்வே கேட் வழியாக காலை நேரங்களில் தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகள், மாணவ மாணவிகள் சென்று வருகின்றனர். நேற்று திடீரென ரயில்வே கேட் மூடப்பட்டு நீண்ட நேரம் திறக்கப்படாமல் இருந்ததால் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு
இரவு நேரத்தில் வாகனப் போக்குவரத்து குறைவாக இருக்கும் நேரத்தில் பழுது பார்க்கும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு இருக்கலாம். அதை விட்டு விட்டு காலை நேரத்தில் ரயில்வே கேட்டை மூடி வைத்து பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது என்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.