கட்டுமாவடி - மணமேல்குடி சாலையில் சாலையோரம் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் வாகன ஓட்டிகள் கோரிக்கை




சென்னை கன்னியாகுமரி சாலை மணமேல்குடி வழியாக செல்கிறது. இந்த சாலையில் தினசரி சரக்கு, கனரக வாகனங்கள் என பல்வேறு வாகனங்கள் செல்கிறது. மேலும் தினசரி பள்ளிக்கு செல்பவர்ள், வேலைக்கு செல்பவர்கள் என ஏராளமானோர் வாகனத்தில் சென்று வருகின்றனர். 
இந்த நிலையில் கிழக்கு கடற்கரை சாலையில் மணமேல்குடி முதல் கட்டுமாவடி செல்லும் சாலையில் சீமைக்கருவேல மரங்கள் சாலையை மறைத்து சூழ்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்துகள் ஏற்படுகிறது. இதில் காரக்கோட்டை பாலம் முதல் கட்டுமாவடி செல்லும் சாலையில் வளைவுகளில் அதிகமான சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ளது. பெரிய விபத்து நடக்கும் முன் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments