அறந்தாங்கியில் ரூ.46 ேகாடியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த கட்டிடம் 6 தளங்களுடன் அமைகிறது.
அரசு தலைமை மருத்துவமனை
புதுக்கோட்டையில் அரசு மருத்துவக்கல்லூரி கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதையடுத்து புதுக்கோட்டை நகரில் இயங்கி வந்த அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரிக்கு இடம் பெயர்ந்தது.
தற்போது புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு மட்டும் பழைய அரசு மருத்துவமனையில் இயங்கி வருகிறது.இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக அறந்தாங்கி அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு, அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.
மேலும் புதிய கட்டிடங்கள் கட்ட தமிழக அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிதி ஒதுக்கியது. அறந்தாங்கி அரசு மருத்துவமனை வளாகத்தின் அருகே புதிய கட்டிடத்திற்கான கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
6 தளங்களில் கட்டிடம்
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:- அறந்தாங்கியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை பல்நோக்கு மருத்துவ கட்டிடம் ரூ.46 கோடியில் கட்டப்படுகிறது. தரைத்தளம் மற்றும் 6 தளங்களுடன் இந்த கட்டிடம் அமைகிறது. இதில் கட்டுமான பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தற்போது தரைதளம் தொடங்கி 4-வது தளம் வரை கட்டப்பட்டுள்ளன. 5-வது தளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.