விசைப்படகு மூழ்கியது
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள சோளியக்குடி லாஞ்சியடியில் இருந்து தங்கச்சிமடத்தை சேர்ந்த பாஸ்கரன் (வயது 50) என்பவருக்கு சொந்தமான விசைப்படகு நேற்று முன்தினம் கடலுக்கு சென்றது. அந்த படகில் பாம்பனை சேர்ந்த நிக்கோனியஸ் (35), சோளியக்குடி லாஞ்சியடி நவனேஷ் (25), ராமேசுவரத்தை சேர்ந்த ராபின்சன் (22), எம்.வி.பட்டினம் காந்தி நகரை சேர்ந்த மதியழகன் (52) ஆகிய 5 பேரும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் நேற்று முன்தினம் இரவு தொண்டி அருகே 4 கடல் மைல் தூரத்தில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது பலத்த காற்று வீசியது. மேலும் கடலில் அலை அதிகமாக இருந்ததால் விசைப்படகினுள் தண்ணீர் புகுந்தது.
5 பேர் மீட்பு
அப்போது படகின் பலகை உடைந்து கடல்நீர் படகில் புகுந்தது. இதனால் படகு கடலுக்குள் மூழ்கியது. உடனே படகில் இருந்த மீனவர்கள் வாக்கி டாக்கி மூலம் தகவல் தெரிவித்தனர். அப்போது அருகில் மீன்பிடித்து கொண்டிருந்த சோளியக்குடி லாஞ்சியடியை சேர்ந்த 5 விசைப்படகுகள் அங்கு சென்று கடலில் தத்தளித்து கொண்டிருந்த 5 மீனவர்களை பத்திரமாக மீட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்தும் மீன்வளத்துறை அதிகாரிகள், கடற்கரை போலீஸ் நிலைய போலீசார், கிராமத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து மீனவர்கள் 5 பேரும் லாஞ்சியடி கடற்கரைக்கு வந்தனர். தொண்டி கடற்கரை போலீஸ் நிலைய போலீசார் மீனவர்களிடம் விசாரணை நடத்தினர்.
நிவாரணம் வழங்க வேண்டும்
மேலும் இதுகுறித்து சோளியக்குடி லாஞ்சியடி மீனவ கிராம தலைவர் காளிதாஸ் கூறியதாவது:-
தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர் பாஸ்கரன் என்பவர் விசைப்படகு மூலம் மீன்பிடித்தொழில் செய்து வந்தார். கடலுக்குள் மூழ்கிய விசைப்படகின் மதிப்பு ரூ.15 லட்சம். படகு கடலில் மூழ்கியதால் அதில் இருந்த மீன்பிடி வலைகள், 200 லிட்டர் டீசல் உள்பட சுமார் ரூ.20 லட்சத்திற்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மூழ்கிய படகை மீட்டுக் கொண்டு வந்தாலும் அதனை மீண்டும் பயன்படுத்த முடியாது. எனவே மீனவர் பாஸ்கரன், வாழ்வாதாரத்தை இழந்துள்ளார். சோளியக்குடி லாஞ்சியடி கிராம விசைப்படகு மீனவர்கள் சார்பில் அரசு அவருக்கு நிவாரணம் வழங்க மாவட்ட கலெக்டர், மீன்வளத்துறை அதிகாரிகள் இதற்காக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.