ஒவ்வொரு பெற்றோருக்கும் குழந்தை வளர்ப்பு என்பது சவாலான விஷயம். அதுவும் 3 வயதிற்குள் இருக்கும் குழந்தைகளின் அழுகையை பெற்றோரைத்தவிர மற்றவர்கள் புரிந்துக்கொள்வது என்பது இயலாது.
ஒவ்வொரு பெற்றோருக்கும் குழந்தை வளர்ப்பு என்பது சவாலான விஷயம். அதுவும் 3 வயதிற்குள் இருக்கும் குழந்தைகளின் அழுகையை பெற்றோரைத்தவிர மற்றவர்கள் புரிந்துக்கொள்வது என்பது இயலாது. அதே சமயம் பெற்றோர்களும் குழந்தைகளை அதிக கவனத்துடன் வளர்க்கும் பொறுப்பில் இருக்கின்றனர். முக்கிய பொருட்களை அவர்களுக்கு விளையாட கொடுக்கவோ அல்லது அருகில் வைத்துவிட்டுச் செல்லவோ கூடாது.
மதுரையைச் சேர்ந்தவர் சூரிய பிரகாஷ் . இவர் அஞ்சல் துறையில் பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு திருமணம் ஆகி ஒரு வருடமே ஆன தரன் தேவா என்ற குழந்தை ஒன்று இருந்துள்ளது. இவர் தனது மனைவியின் சகோதரி குழந்தையின் பிறந்தநாள் நிகழ்ச்சிக்காக குடும்பத்துடன் சிவகங்கை சென்று இருக்கிறார். நிகழ்ச்சிக்கு அனைவரும் தயாராக இவரது குழந்தையையும் தயார் செய்துள்ளனர்.
குழந்தைக்கு தலைசீவி பொட்டு வைத்துவிட்டு மை டப்பாவை குழந்தையின் அருகிலேயே விட்டுச் சென்றுள்ளனர். யாரும் கவனிக்காத நிலையில் குழந்தை கண்மை டப்பாவை எடுத்து வாயில் போட்டு விழுங்கி இருக்கிறது. அதைக்கண்ட அக்குழந்தையின் தாய் வாயிலிருந்து மை டப்பாவை எடுக்க முயற்சித்துள்ளார். ஆனால் குழந்தை மை டப்பாவை விழுங்கியுள்ளது. இதில் மை டப்பாவானது குழந்தையின் மூச்சுக்குழாயில் சிக்கி மூச்சுதிணறியுள்ளது. உடனடியாக,
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு குழந்தையைக் கொண்டு சென்ற நிலையில், குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.