விசைப்படகு
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் பகுதிகளில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இங்கிருந்து விசைப்படகுகளில் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்வது வழக்கம். இந்த நிலையில் ஜெகதாப்பட்டினம் பகுதியில் இருந்து நேற்று 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
அதில் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த பிரதீப் (வயது 37), செந்தில்குமார் (50), மணிகண்டன் (45) ஆகியோரது விசைப்படகுகளில் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த பிரதீப் (37), ரஞ்சித் (29), பிரபாகரன் (39), அஜித் (25), விஷ்வா (25), ஆனந்தராஜ் (34), ஆனந்தபாபு (36), குபேந்திரன் (25), சேகர் (38), மணிகண்டன் (40), முத்துக்குமார் (36), செல்லத்தம்பி (57), செல்வம் (42), சுரேஷ் (36) ஆகிய 14 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
14 மீனவர்கள் கைது
இவர்கள் கடலில் சுமார் 18 நாட்டிக்கல் தொலைவில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 14 மீனவர்களையும் சிறை பிடித்து கைது செய்தனர். மேலும் அவர்களது 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து இலங்கைக்கு கொண்டு சென்றனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை இலங்கையில் உள்ள காங்கேசன் துறைமுகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம் புதுக்கோட்டை மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மீனவர்கள் கோரிக்கை
தொடரும் இந்த சம்பவங்களால் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் சோகமடைந்துள்ளனர். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்களுக்கு அங்குள்ள கோர்ட்டுகளில் அதிக அளவு அபராதம் விதிக்கப்படுவதாக மீனவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து வரும் சம்பவத்தை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
©
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.