கடல் சீற்றம்
வங்க கடலில் ஆந்திராவில் இருந்து தென்கிழக்கு சுமார் 300 கி.மீ. தொலைவில் புயல் சின்னம் ஒன்று உருவாகி உள்ளது. புயல் சின்னம் உருவாகியதை தொடர்ந்து பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 2-வது நாளாக 1-வது எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் வங்க கடலில் உருவாகி உள்ள புயல் சின்னத்தை தொடர்ந்து கீழக்கரை, ஏர்வாடி, வாலிநோக்கம் கடலோர பகுதிகளில் கடந்த 2 நாட்களாக வழக்கத்திற்கு மாறாக பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது. மேலும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடல் சீற்றமாக காணப்பட்டு வருகிறது.
சூறாவளி காற்று
மாவட்டத்தில் கீழக்கரை, ஏர்வாடி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து வீசிவரும் பலத்த சூறாவளி காற்று காரணமாக விசைப்படகுகள், நாட்டுப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் கரையோரத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சூறாவளி காற்று வீசி வருவதால் கீழக்கரை கடற்கரை சாலையில் பல இடங்களில் சாலையை மணல் மூடி உள்ளது.
இதேபோல் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக தொடர்ந்து பலத்த சூறாவளி காற்று வீசி வருவதுடன் கடல் சீற்றமாக காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.