புதுக்கோட்டையில் மீன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் கெட்டுப்போன மீன்கள் 15 கிலோ அளவில் பறிமுதல் செய்யப்பட்டன.
அதிகாரிகள் ஆய்வு
புதுக்கோட்டை சந்தைபேட்டையில் மீன் மார்க்கெட் உள்ளது. இதேபோல மாநகரில் டி.வி.எஸ். கார்னர் அருகே உள்பட ஆங்காங்கே மீன்கடைகளில் வியாபாரம் நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மீன்களை விரும்பிய இடங்களில் வாங்கி செல்வார்கள்.
இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தில் அசைவப்பிரியர்கள் மீன்கள் வாங்க கடைகளில் குவிந்தனர். இதற்கிடையில் மீன் கடைகளில் பார்ம்லின் மற்றும் கெட்டுப்போன மீன்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை மீன்வளத்துறை உதவி இயக்குனர் பஞ்சராஜா தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களுடன் இணைந்து நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
15 கிலோ மீன்கள் பறிமுதல்
புதுக்கோட்டை மீன் மார்கெட் மற்றும் நகர பகுதியில் உள்ள மீன் கடைகளில் மீன்களை பார்வையிட்டனர். இதில் ஒரு சில கடைகளில் கெட்டுப்போன மீன்களை வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்தனர். இதில் சுமார் 15 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதனை அதிகாரிகள் அழித்தனர். மேலும் மீன் கடைக்காரர்களை அதிகாரிகள் எச்சரித்தனர். இதற்கிடையில் கெட்டுப்போன மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்த நிலையில், மீன்கள் வாங்க வந்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.