தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவராக இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் நவாஸ் கனி M.P தேர்வு





தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவராக இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் நவாஸ் கனி M.P தேர்வு செய்யப்பட்டுள்ளார் 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்

தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன்.

தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைமை அலுவலகத்தில் இன்று (19-09-2024) காலை 11 மணியளவில் நடைபெற்ற வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் கூட்டத்தில் தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் தலைவராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன்.

மிக முக்கியமான காலகட்டத்தில் இந்த பொறுப்பை நம்பிக்கையோடு வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திராவிட மாடல் நல்லாட்சி நாயகர்  தளபதி மு க ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் திரு செஞ்சி மஸ்தான் அவர்களுக்கும், நம்பிக்கையோடு என்னை பரிந்துரை செய்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே எம் காதர் மொய்தீன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். 

இந்நிகழ்வில் முதன்மை செயல் அலுவலர் திரு தாரேஸ் அகமது இ.ஆ.ப., மற்றும் மாண்புமிகு வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
--
கே நவாஸ்கனி MP
தலைவர்- தமிழ்நாடு வக்ஃப் வாரியம்,
இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்,
மாநில துணைத் தலைவர்- இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments