புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எம்எஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் ரோட்ராக்ட் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.
ரோட்டரி சங்கத்தின் மாணவ இளைஞர்கள் பிரிவான ரோட்ராக்ட் இவ்வாண்டு புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா அறந்தாங்கி தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் அப்துல் பாரி தலைமையில் துணை ஆளுநர் மருத்துவர் விஜய் ரோட்ராக்ட் மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
ரோட்ராக்ட் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ரேவதி அனைவரையும் வரவேற்றார். ரோட்ராக்ட் புதிய தலைவராக சேவுகப்பெருமாள் செயலாளராக புகழேந்தி பொருளாளராக ராஜசேகர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். பொறுப்பேற்றுக் கொண்ட புதிய தலைவர் இவ் வருடத்திற்கான புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தினார்.
பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் முகமது பாரூக் ரோட்டரி மண்டல செயலாளர் செலக்சன் சுரேஷ்குமார் எவர்கிரீன் முனைவர் முபாரக் அலி ஆகியோர் புதிய நிர்வாகிகளை வாழ்த்தி பேசினார்கள். பாலிடெக்னிக் இருபால் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.
இறுதியில் ஃபோர்ட் சிட்டி ரோட்டரி சங்க செயலாளர் ஆண்டோ பிரவின் அனைவருக்கும் நன்றி கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.