இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 13 பேர் விடுதலை செய்யப்பட்டனர். 4 மீனவர்களுக்கு ரூ.40 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
18 மீனவர்கள் கைது
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதிகளை சேர்ந்த 4 படகுகளில் சென்ற 18 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கடந்த மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி தீர்ப்பு கூறினார். அதில் 18 மீனவர்களில் 5 மீனவர்கள் ஏற்கனவே எல்லை தாண்டி மீன்பிடித்து சிறைபிடிக்கப்பட்டு பின்னர் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் மீண்டும் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் அவர்களுக்கு தண்டனை விதிக்கப்படுகிறது.
13 பேர் விடுதலை
அதன்படி தண்டனை பெற்றவர்களில் 4 பேருக்கு ரூ.40 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த தொகையை கட்டத்தவறினால் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், மற்றொரு மீனவர் 2-வது முறையாக எல்லை தாண்டி மீன்பிடித்ததால் அவருக்கு 18 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மீதமுள்ள 13 மீனவர்கள் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்படுகின்றனர். மேலும், இவர்கள் 5 ஆண்டுகளில் எல்லை தாண்டி மீன்பிடித்தால் அவர்களுக்கு 18 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என்று நீதிபதி தீர்ப்பு கூறினார். விடுதலை செய்யப்பட்ட 13 மீனவர்களை இந்திய தூதரக அதிகாரிகள் வசம் ஒப்படைக்க உள்ளதாக தெரிகிறது. மேலும், அவர்கள் ஓரிரு நாட்களில் தமிழகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 6 மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.