வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் சேதங்கள் தொடர்பாக கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என கலெக்டர் அருணா தெரிவித்தார்.
தூர்வாரும் பணி
வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுக்கோட்டை மாவட்டத்தில், நீர்வளத்துறை சார்பில், நீர் வரத்துவாரி வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு வரும் பணிகளை மாவட்ட கலெக்டர் அருணா நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், கவிநாடு ஊராட்சி, செல்லுக்குடி கிராமத்தில் உள்ள கவிநாடு கண்மாய் நீர் வரத்துவாரி வாய்க்கால், பூசத்துறை கிராமத்தில் உள்ள தெற்கு வெள்ளாறு நீர் வரத்துவாரி வாய்க்கால், அரிமளம் ஊராட்சி ஒன்றியம், தாஞ்சி நீர் வரத்துவாரி கண்மாய், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், இசுகு கண்மாய் மற்றும் இசுகுப்பட்டி கிராமம், ஓடக்குளம் கண்மாய் நீர் வரத்துவாரி ஆகிய இடங்களில் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டார்.
கட்டுப்பாட்டு அறை
அப்போது கலெக்டர் அருணா கூறியதாவது:- மழைநீர் வழிந்தோடும் வரத்து வாய்க்கால்கள் தூர்வாருதல், சீரற்ற சாலைகளை சரி செய்தல், பாதுகாப்பு உபகரணங்களை தயார் நிலையில் வைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழையானது அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை பெய்யக்கூடியது. பேரிடர் காலங்களில், கலெக்டர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறையின் 04322 222207 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களை பொதுமக்கள் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
பொதுமக்கள் அனைவரும் வடகிழக்கு பருவ மழையின்போது, தமிழக அரசின் மூலம் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை உரிய முறையில் பின்பற்றி ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின் போது அதிகாரிகள் உடன் இருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.