தொண்டி பேரூராட்சியில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் தனிநபர் வீட்டு குடிநீர் இணைப்பு வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனையொட்டி தொண்டி பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டு பகுதிகளிலும் குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல் தரைமட்ட நீர் தேக்கத் தொட்டிகள் கட்டப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து தொண்டி பேரூராட்சியில் தனிநபர் வீட்டு குடிநீர் இணைப்பு வழங்கும் பணியை பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பானு ஜவஹர் அலிகான் தொடங்கி வைத்தார். அப்போது அவர் தொண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முதற்கட்டமாக 4 ஆயிரம் தனிநபர் வீட்டு குடிநீர் இணைப்பு வழங்கப்பட உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் துணைத் தலைவர் அழகு ராணி ராஜேந்திரன், வார்டு கவுன்சிலர்கள் பேரூராட்சி பணியாளர்கள் அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.