தொண்டியில் ஜல்ஜீவன் திட்டத்தில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணி பேரூராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்




தொண்டி பேரூராட்சியில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் தனிநபர் வீட்டு குடிநீர் இணைப்பு வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனையொட்டி தொண்டி பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டு பகுதிகளிலும் குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல் தரைமட்ட நீர் தேக்கத் தொட்டிகள் கட்டப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து தொண்டி பேரூராட்சியில் தனிநபர் வீட்டு குடிநீர் இணைப்பு வழங்கும் பணியை பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பானு ஜவஹர் அலிகான் தொடங்கி வைத்தார். அப்போது அவர் தொண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முதற்கட்டமாக 4 ஆயிரம் தனிநபர் வீட்டு குடிநீர் இணைப்பு வழங்கப்பட உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் துணைத் தலைவர் அழகு ராணி ராஜேந்திரன், வார்டு கவுன்சிலர்கள் பேரூராட்சி பணியாளர்கள் அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments