கோபாலப்பட்டினம் வாக்காளர்களுக்கு இராமநாதபுரம் மக்களவை தொகுதி உறுப்பினர் நவாஸ் கனி MP நன்றி தெரிவித்தார்
2024 நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்து வெற்றி பெற செய்த கோபாலப்பட்டினம் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவருமான கே.நவாஸ் கனி M.P கோபாலபட்டினத்திற்கு வருகை புரிந்து நன்றி தெருவித்தார்கள்.
2024 நாடாளுமன்ற தேர்தலில் இராமநாதபுரம் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கே.நவாஸ் கனி எம்.பி வேட்பாளராக இரண்டாவது முறையாக அறிவிக்கப்பட்டார்.
இந்திய கூட்டணி கட்சி சார்பில் இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட கே.நவாஸ் கனி தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார்.
நாடாளுமன்ற தேர்தலில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தமைக்காக இராமநாதபுரம் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கே.நவாஸ் கனி எம்.பி ஒவ்வொரு பகுதிக்கும் நேரில் சென்று மக்களை சந்தித்து நன்றி தெருவித்து வருகிறார்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள
கோபாலப்பட்டினத்தில் 05-10-2024 சனிக்கிழமை காலை 9 மணியளவில் ஜூம்ஆ பெரிய பள்ளிவாசல் வளாகத்தில்
கே.நவாஸ் கனி எம்.பி ஜமாத்தார்கள் ஊர் பொதுமக்களை சந்தித்து நன்றி தெரிவித்து உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் கோபாலப்பட்டினம் ஜமாத் நிர்வாகிகள், உயர் மட்ட குழு உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் தோழமை கட்சி நிர்வாகிகள் & அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.