ஆயுதபூஜை வருகிற 11-ந் தேதியும், 12-ந் தேதி விஜயதசமி பண்டிகையும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வெளியூர்களில் வசிப்பவர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்வது உண்டு. பயணிகள் வசதிக்காக தெற்கு ரெயில்வே சார்பில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அதில் சென்னை சென்டிரலில் இருந்து புதுக்கோட்டை வழியாக தூத்துக்குடிக்கு வருகிற 8-ந்தேதியும், மறுமார்க்கத்தில் தூத்துக்குடியில் இருந்து வருகிற 9-ந் தேதியும் ரெயில்கள் இயக்கப்படுகிறது. சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து வருகிற 8-ந் தேதி இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு புதுக்கோட்டைக்கு மறுநாள் காலை 8.58 மணிக்கு வந்து காலை 9 மணிக்கு புறப்படும். தூத்துக்குடிக்கு மதியம் 1.50 மணிக்கு சென்றடையும். இதேபோல் மறுமார்க்கத்தில் 9-ந் தேதி மாலை 4.15 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு புதுக்கோட்டைக்கு இரவு 9.03 மணிக்கு வந்து இரவு 9.05 மணிக்கு புறப்படும். சென்னை சென்டிரலுக்கு மறுநாள் காலை 8.55 மணிக்கு சென்றடையும். இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நேற்று காலையில் தொடங்கியது. இதில் சென்னையில் இருந்து புதுக்கோட்டை வருவதற்கு பயணிகள் ஆர்வமாக டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். இதில் நேற்று மாலை நேர நிலவரப்படி சென்னை-புதுக்கோட்டைக்கு முன்பதிவு படுக்கையில் 124 டிக்கெட்டுகள் முன்பதிவாகியிருந்தன. மேலும் இருக்கைகள் காலியாக உள்ளன.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.