ெரயில் பாலம்
பாம்பன் கடலில் ரூ.545 கோடி நிதியில் புதிதாக ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மையப்பகுதியில் கட்டப்பட்டுள்ள செங்குத்து வடிவிலான திறந்து மூடும் வகையிலான தூக்குப்பாலமும் கடந்த 3 நாட்களாக திறந்து மூடி நடந்த சோதனை ஓட்டம் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் புதிய ரெயில் பாலத்தை மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக வந்தார். அவர் முதலாவதாக ரோடு பாலத்தில் நின்றபடி புதிய ரெயில் பாலத்தை பார்வையிட்டார்.
ஆய்வு
தொடர்ந்து ட்ராலி மூலம் புதிய ரெயில் பாலம் மற்றும் மையப்பகுதியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள தூக்குப்பாலத்தை ஆய்வு செய்தார். அப்போது நடைபெற்று முடிந்துள்ள பணிகள் குறித்து ரெயில்வே கட்டுமான நிறுவன பொறியாளர்கள் குழுவினர் ரெயில்வே கோட்ட மேலாளரிடம் விளக்கி கூறினர்.
வருகின்ற வாரத்தில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் புதிய பாலத்தை ஆய்வு செய்த பின்னர் இந்த மாத இறுதிக்குள் புதிய ரெயில் பாலம் திறந்து ரெயில் போக்குவரத்து தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தரவு
தொடர்ந்து ெரயில்வே கோட்ட மேலாளர் ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் கட்டப்பட்டு வரும் புதிய ரெயில் நிலைய கட்டிட விரிவாக்க பணிகளை ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.