ஆந்திராவில் இருந்து புதுக்கோட்டைக்கு சரக்கு ரெயிலில் 1,350 டன் அரிசி மூட்டைகள் வந்தன




ஆந்திரா மாநிலத்தில் இருந்து சரக்கு ரெயிலில் அரிசி மூட்டைகள் புதுக்கோட்டைக்கு வந்தன. புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் சரக்கு ரெயில்கள் நிறுத்துமிடத்தில் இருந்து சரக்கு ரெயில் நிறுத்தப்பட்டு, வேகன்களில் இருந்து அரிசி மூட்டைகள் லாரிகளில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் மூலம் ஏற்றப்பட்டன. சரக்கு ரெயிலில் புழுங்கல் அரிசி 600 டன்னும், பச்சரிசி 750 டன்னும் என மொத்தம் 1,350 டன் அரிசி மூட்டைகள் வந்திருந்தன. அவை அனைத்தும் தமிழ்நாடு அரசின் நுகர்பொருள் வாணிப கழக குடோன்களுக்கு லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டன. ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசிகள் வழங்கப்பட உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments