திருச்சியில் இருந்து புதுக்கோட்டை வழியாக காரைக்குடிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரெயில் காரைக்குடியில் இருந்து விருதுநகர் வரையும் இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில் இருந்தும் காரைக்குடி வந்தும், அங்கிருந்து புதுக்கோட்டை வழியாக திருச்சிக்கு டெமு ரெயில் இயக்கப்படுகிறது. வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும் இந்த ரெயிலில் பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இந்தரெயில் பெட்டிகளில் ஐ.சி.எப். பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளது. திருச்சி-காரைக்குடி டெமு ரெயில் பெட்டிகள் நேற்று முதல் மாற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து காரைக்குடி- திருச்சி டெமு ரெயில் பெட்டிகள் இன்று (வியாழக்கிழமை) முதல் ஐ.சி.எப். பெட்டிகளாக மாற்றப்படுகிறது. ஐ.சி.எப். பெட்டிகள் என்பது பயணிகள் ரெயில்களில் இயக்கப்படும் பெட்டிகளை போல காணப்படும். ரெயில் பெட்டிகளில் பயணிகள் இருக்கை சற்று அகலமாகவும், இட வசதியும் அதிகமாக இருக்கும். டெமு ரெயில் பெட்டிகள் மாற்றப்பட்டது பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அதேநேரத்தில் வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும் திருச்சி-காரைக்குடி ரெயிலை தினசரி ரெயிலாக இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.