புதுக்கோட்டையில் 21-வது தேசிய கால்நடை கள் கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்குகிறது என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கால்நடைகள் கணக்கெடுப்பு
இந்தியாவில் கால்நடை கணக்கெடுப்பு பணி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படுகிறது. இதுவரை 20 முறை கால்நடை கணக்கெடுப்பு பணி நடைபெற்றுள்ளன. தற்போது 21-வது முறையாக இன்று (வெள்ளிக்கிழமை) தேசிய கால்நடை கணக்கெடுப்பு நாடு முழுவதும் தொடங்க உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திற்கும் இந்த பணி கால்நடை பராமரிப்புத்துறையினரால் இன்று முதல் தொடங்கி 2025-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந் தேதி வரை நடைபெறும். இந்தப் பணியினை மேற்கொள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் 147 கால்நடை கணக்கெடுப்பாளர்கள் மற்றும் 30 மேற்பார்வையாளர்களுக்கு நேர்முகப் பயிற்சி மற்றும் களப்பயிற்சி வழங்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.
வருவாய் கிராம வாரியாகவும், நகரப் பகுதியில் வார்டு வாரியாகவும் கால்நடை கள் கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்த கணக்கெடுப்பின் மூலம் கிராம மற்றும் நகரப் பகுதிகளில் வளர்க்கப்பட்டு வரும் 16 வகையான கால்நடைகளின் எண்ணிக்கை, இனம், வயது, பாலினம் போன்ற விவரங்கள் சேகரிக்கப்படும். கால்நடைகளின் எண்ணிக்கையை துல்லியமாக கணக்கு எடுத்தால் தான் கால்நடை பராமரிப்பிற்கான எதிர்கால திட்டங்களை தீட்டுதல், செயல்படுத்துதல் மற்றும் கண்காணித்தல் ஆகியவை சிறப்பாக செய்ய இயலும்.
நோய் தடுப்பூசி
கால்நடைகளுக்கு எதிர்காலத்தில் தேவைப்படும் தீவனம், கால்நடை நோய்த் தடுப்பூசி, கால்நடை மருந்துகள் உற்பத்தி போன்றவற்றை தட்டுப்பாடு இல்லாமல் தயாரிக்க கால்நடைகள் எண்ணிக்கை முக்கியம். வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப கால்நடைகளில் இருந்து கிடைக்கும் உணவுப் பொருட்களான பால், பாலாடைக்கட்டி, பன்னீர், தயிர், வெண்ணை, நெய், ஆட்டு இறைச்சி, பிற இறைச்சி, முட்டை போன்றவற்றை தட்டுப்பாடின்றி உற்பத்தி செய்ய கால்நடை கணக்கெடுப்பு மிக முக்கியமானதாகும்.
கால்நடைகளில் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய விலங்குவழி தொற்று நோய்களான ரேபிஸ் எனப்படும் வெறி நோய், புரூசெல்லா எனப்படும் கருச்சிதைவு நோய், எலிக்காய்ச்சல் எனப்படும் மஞ்சள் காமாலை போன்ற 100-க்கும் மேற்பட்ட நோய்களை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் கால்நடைகளின் எண்ணிக்கை அவசியமாகிறது.
கடும் மழை, புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் கால்நடைகள் பாதிக்காமல் தடுக்கவும் கால்நடைகளுக்கு பாதிப்பு எற்பட்டால் உரிய நிவாரணம் அளிக்கவும் கால்நடை கணக்கெடுப்பு முக்கியமாகும். கால்நடைகளுக்கான கொட்டகை வசதி, கால்நடை காப்பீடு வசதி, கால்நடை தீவன உற்பத்தி போன்றவற்றை திட்டமிட கால்நடை எண்ணிக்கை இன்றியமையாதது ஆகும்.
கணக்கெடுப்பின் வழிமுறைகள்
அனைத்து கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் இக்கணக்கெடுப்பு நடைபெறும். கால்நடைகள் உள்ள மற்றும் இல்லாத அனைத்து வீடுகள், நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் பண்ணைகள், வழிபாட்டுத் தலங்கள், விலங்கு நல மையங்களில் உள்ள பசு மடங்கள் ஆகியவற்றில் உள்ள கால்நடைகளின் விவரங்கள் சேகரிக்கப்படும்.
கால்நடை வைத்துள்ளவரின் பெயர், முகவரி, ஆதார், ெசல்போன் எண், முக்கிய தொழில், அவரிடம் உள்ள நிலத்தின் அளவு, அவரிடம் உள்ள கால்நடைகளின் எண்ணிக்கை, இனம், வயது, பாலினம் போன்ற விவரங்கள் சேகரிக்கப்படும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.