GPM மக்கள் மேடையின் சார்பாக அனைத்து மக்களுக்கும் முதல் அமைச்சரின் காப்பீடு திட்டம் எடுத்து கொடுக்க முகாம் நடைபெற்றது
GPM மக்கள் மேடையின் சார்பாக கோபாலப்பட்டினம் ஊரிலுள்ள அனைத்து மக்களுக்கும் முதல் அமைச்சரின் காப்பீடு திட்டத்தின் கீழ் மருத்துவ காப்பீடு அட்டை எடுத்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இரு கட்டங்களாக அறிவிக்கபட்டு இருந்தது
அதற்கான பணிகளை செய்துவந்த நிலையில் மீண்டும் துரிதபடுத்தி இந்த மாதத்திற்குள் நமது ஊரிலுள்ள அனைத்து மக்களும் பயன் பெறும் நன் நோக்கத்தில் 12-10-2024 முதல் GPM பொது நலசேவை மையம் நடத்திவரும் முகம்மது யூசுப் மற்றும் ஹாஷியா இ-சேவை மையம் நடத்திவரும் அப்துல் ரசாக் ஆகிய இரண்டு இடங்களில் இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது . பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி முதல் அமைச்சரின் இலவச மருத்துவ காப்பீடு திட்டத்தை விண்ணப்பித்தனர்.
விண்ணபித்தவர்களுக்கு கோபாலப்பட்டினம் தங்கமஹால் திருமன மண்டபத்தில் அரசு அதிகாரிகளை கொண்டு புகைப்படம் எடுத்து முதல் அமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டம் பெற்று கொடுக்கும் நிகழ்வு கடந்த இரு நாட்களாக(23-10-2024 மற்றும் 24-10-2024) நடைபெற்றது
இந்த சிறப்பு முகாமில் 366 நபர்கள் புகைப்படம் எடுத்து முதல் அமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் விண்ணபங்கள் முழுமையாக பெற்று கொடுக்கபட்டுள்ளது இந்த முகாமில் புகைப்படம் எடுத்த நபர்கள் விண்ணப்பம் அளித்த இடத்தில் முதல் அமைச்சரின் காப்பீடு திட்டத்தின் என்னை பெற்று கொள்ளாலாம்
இந்த சிறப்பு முகாமில் விண்ணப்பிக்க தவறியவர்கள் GPM பொது நல சேவை மையம் நடத்திவரும் முகம்மது யூசுப் மற்றும் ஹாஷியா இ-சேவை மையம் நடத்திவரும் அப்துல் ரசாக் ஆகிய இரண்டு இடங்களில் விண்ணப்பிக்குமாறும் பின்னர் ஒரு நாளில் புகைப்படம் எடுக்க ஏற்பாடு செய்யப்படும் என்பதையும் GPM மக்கள் மேடை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.