புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலபட்டிணத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று 25/10/2024 மதியம் 3.00 மணி அளவில் பள்ளி மேலாண்மை குழுவின் முதல் கூட்டம் மேலாண்மை குழு தலைவர் மற்றும் தலைமை ஆசிரியர் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
பள்ளியின் ஆசிரியர் சாகுல் ஹமீது அவர்கள் உறுப்பினர்களை வரவேற்று உரை நிகழ்த்தினார்.
கூட்டத்தில் முதன்மை தீர்மானமாக பள்ளி குழந்தைகளின் நலன் கருதி மாதந்தோறும் கூட்டம் நடைபெற வேண்டும் என்றும் மற்றும் பள்ளிக்கு அடிப்படை தேவைகள் குறித்தும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
தலைமை ஆசிரியர் சிலுவை ராஜ் அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருடைய கருத்துக்களையும் கேட்டு அதனடிப்படையில் தீர்மானத்தை பதிவு செய்தார், மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
சிறப்பாக செயல்பட்டு வரும் தலைமை ஆசிரியரின் பணிகள் மேலும் சிறக்க பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.