புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் பள்ளியின் தலைமை ஆசிரியர் மதிப்பிற்குரிய திரு ஜீவானந்தம் அவர்களின் தலைமையில் தொடங்கியது.
இந்நிகழ்வில் மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் முத்துலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு, போதைப்பொருள் எதிர்ப்பு குழு அமைத்தல்,
போதை பொருள் எதிர்ப்பு மன்றங்களை அமைத்தல், பள்ளியில் நடைபெறும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் குறித்த விழிப்புணர்வும் , உட்குழு அமைத்தல் பற்றியும் , பள்ளிக்கல்வித்துறை இலவச மைய அழைப்பு எண் 14417 மற்றும் குழந்தைகள் உதவி மைய எண் 1098 போன்ற தகவல்களை குழுவில் விவாதிக்கப்பட்டது.
விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவர்களை ஊக்குவித்தல் வேண்டும் என்ற தகவலையும் திறந்தவெளியில் மலம் கழித்தல் கூடாது என்ற விழிப்புணர்வு சார்ந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் இந்நிகழ்வில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஆசிரியர்கள் (ஓய்வு) திரு.திருமுகம் திரு சௌந்தரராஜன் மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.