புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணத்தில் பழைய காலனி தெருமக்கள் சார்பாக தெரு முழுவதும் CCTV கேமரா பொருத்தப்பட்டுள்ளது. தெருக்களில் குற்றச்சம்பவங்கள் மற்றும் திருட்டுகள் ஏதேனும் நடக்காமல் இருப்பதற்காக தெரு முழுவதும் CCTV கேமரா பொருத்த வேண்டும் என்று தெரு மக்களின் சார்பாக முடிவு செய்தார்கள். அதன் அடிப்படையில் கோபாலப்பட்டிணம் ஜமாத் நிர்வாகிகளிடம் முறையான கடிதம் கொடுத்து கேமரா பொருத்த அனுமதி கேட்டார்கள். ஜமாத் நிர்வாகம் நான்கு பேர் கொண்ட கேமரா கண்காணிப்பு குழு அமைத்து அனுமதி வழங்கினார்கள்.
1.அலி அக்பர் S/O அகமது கபீர்
2.வாசிம் கான் S/O முகம்மது யூசுப்
3.B.அசாருதீன் S/Oபாரூக் அலி
4.முஸ்தாக் S/Oஅப்துல் காதர்
இந்த நான்கு நபர்களும் தெரு மக்களிடம் முறையாக வசூல் செய்து 24 CCTV கேமரா தெரு முழுவதும் பொருத்தப்பட்டுள்ளது. இது போல் அனைத்து தெருக்களிலும் CCTV கேமரா பொருத்தினால் நமது ஊர் பாதுகாப்பாகவும், குற்றச் சம்பவங்களை தடுக்கவும் முடியும்.
இதற்காக பொருளாதார உதவிகள் வழங்கிய தெரு மக்களுக்கும் இதை முன்னின்று சிறப்பாக செயல்படுத்திய கேமரா குழுவை சேர்ந்த உறுப்பினர்களுக்கும் மற்றும் கோபாலப்பட்டிணம் ஜமாத் நிர்வாகிகளுக்கும் GPM மீடியா சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.