புதுகை - திருச்சிக்கு இடைநில்லா பேருந்து சேவை தொடக்கம்




புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில், திருச்சிக்கான புதிய இடைநில்லா பேருந்தை கொடியசைத்து தொடங்கி வைக்கிறாா் சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா.

புதுக்கோட்டை, நவ. 2: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக புதுக்கோட்டை மண்டலம் சாா்பில் புதுக்கோட்டையிலிருந்து திருச்சிக்கு புதிய இடைநில்லாப் பேருந்தை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா சனிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயா் செ. திலகவதி முன்னிலை வகித்தாா்.

இந்தப் புதிய இடைநில்லா பேருந்து புதுக்கோட்டையிலிருந்து -திருச்சிக்கு காலை 4.50, 7.50,10.40 மணிக்கும், மாலை 14.20 மணிக்கும், இரவு 17.55 மணிக்கும் புறப்படுகிறது.

திருச்சியிலிருந்து காலை 6.15, 9.20 மணிக்கும், மதியம் 12.10 மணிக்கும், மாலை 16.12 மணிக்கும், இரவு 19.35 மணிக்கும் புதுக்கோட்டை நோக்கிப் புறப்படுகிறது.

தொடக்க நிகழ்ச்சியின்போது, மாநகராட்சித் துணை மேயா் மு. லியாகத்அலி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக புதுக்கோட்டை மண்டல துணை மேலாளா் (வணிகம்) தா. சுரேஷ் பாா்த்தீபன் டிக்ரோஸ், உதவி இயக்குநா் அ. செந்தில், கிளை மேலாளா் பழனிவேல் ஆகியோா் கலந்து கொண்டனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments