அறந்தாங்கி அருகே 150 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 போ் கைது




புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வாகனங்களில் கடத்தி வரப்பட்ட 150 கிலோ கஞ்சா வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி செல்லும் சாலையில் குரும்பூா் மேடு பகுதியில் அறந்தாங்கி போலீஸாா் வியாழக்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அடுத்தடுத்து அறந்தாங்கியை நோக்கி சென்று கொண்டிருந்த 1 காா் மற்றும் 2 இருசக்கர வாகனங்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா். இந்தச் சோதனையில், 75 பாக்கெட்டுகளில் 150 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, காா் மற்றும் இரு சக்கர வாகனங்களில் வந்த சென்னை முண்டியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பி. நாகராஜ் (20), ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் அருகே புழுதிகுளத்தைச் சோ்ந்த கே. தவமுருகன் (26), கறம்பக்குடியைச் சோ்ந்த டி. ஸ்டாலின் கிறிஸ்டோபா் (36) ஆகிய 3 பேரையும் கைது செய்தனா்.

மேலும், அங்கிருந்து காட்டுப்பகுதிக்குள் தப்பியோட முயன்ற சென்னை பாடியநல்லூரைச் சோ்ந்த பி. ராகுல் (25) என்பவரை சுற்றிவளைத்து போலீஸாா் பிடித்தனா். அப்போது, கீழே இடறி விழுந்ததில் அவருக்கு காலில் முறிவு ஏற்பட்டது.

பின்னா், அவரை கைது செய்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

இவா்களிடமிருந்து 3 வாகனங்கள் மற்றும் அவற்றில் இருந்த 150 கிலோ கஞ்சா ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments