பள்ளிவாசல் சொத்துகளை கபளீகரம் செய்ய கொண்டு வரப்பட்டுள்ள வக்பு திருத்த மசோதாவை முழுமையாக திரும்ப பெற கோரியும், வழிபாட்டு தலங்கள் பாதுகாப்புச்சட்டம் 1991-ஐ முழுமையாக கடைப்பிடிக்க கோரியும் ராமநாதபுரம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு த.மு.மு.க. சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடந்தது. த.மு.மு.க. துணை பொதுச்செயலாளர் சலிமுல்லாகான் தலைமை தாங்கினார். மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். த.மு.மு.க. மாநில செயலாளர் சாதிக்பாட்சா, அப்துல்காதர் மன்பயி, உசேன்கனி, சம்சுதீன்சேட், ஷான்ராணி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். ராமநாதபுரம் தெற்கு, மேற்கு, மத்தி, கிழக்கு, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்ட தலைவர்கள் வாவா ராவுத்தர், ஷேக்அப்துல்லா, இப்ராஹிம், பட்டாணி மீரான், ஷேக்தாவுதீன், துல்கருணைசேட் உள்பட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ஆண்களும், பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.