மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு
மீமிசல் அருகே உள்ள சாக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராக்கு (வயது 65). இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர், மூதாட்டி ராக்குவின் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்றார். இந்த சம்பவம் குறித்து மூதாட்டி ராக்கு அளித்த புகாரின் பேரில் மீமிசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்தநிலையில் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தபோது மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டவர் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த முருகானந்தன் மகன் சந்தோஷ் (26) என்பது தெரிய வந்தது. மேலும், இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
கைது
இதையடுத்து, அவரை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே மேற்பார்வையில் கோட்டைப்பட்டினம் போலீஸ் துணை சூப்பிரண்டு காயத்ரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் சந்தோஷை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்தநிலையில் அவர் சென்னையில் பதுங்கி இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் சென்னையில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் பதுங்கி இருந்த சந்தோஷை கைது செய்தனர். பின்னர் அவரை மீமிசல் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சங்கிலி பறிப்பு வழக்கில் குற்றவாளியை விரைவாக பிடித்த தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே வெகுவாக பாராட்டினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.