‘பெஞ்ஜல்’ புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்ட மக்களுக்கு ரூ.4 லட்சம் மதிப்புள்ள மளிகை பொருட்கள், அரிசி, பிஸ்கட், தண்ணீர் பாட்டில், துண்டு, வேட்டி உள்ளிட்ட நிவாரண பொருட்கள் அறந்தாங்கி அருகே அரசர்குளம் தென்பாதி ஊராட்சியில் உள்ள பள்ளிவாசலில் இருந்து சரக்கு வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டன. நிகழ்ச்சியில் அரசர்குளம் தென்பாதி ஊராட்சி மன்ற தலைவர் சாகுல் ஹமீது தலைமை தாங்கினார். ஜமாத் தலைவர் இப்ராஹிம், செயலாளர் முகமது அலி மற்றும் ஜமாத் நிர்வாகிகள் அறந்தாங்கி ஆர்.டி.ஓ. சிவக்குமாரிடம் நிவாரண பொருட்களை வழங்கினார். பின்னர் அந்த நிவாரண பொருட்கள் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அப்போது அறந்தாங்கி தாசில்தார் திருநாவுக்கரசு, கிராம நிர்வாக அதிகாரி மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.